Screen Reader Access     A-AA+
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301, ஈரோடு .
Arulmigu Sangameswarar Temple, Bhavani, Erode - 638301, Erode District [TM010224]
×
Temple History

தல வரலாறு

அழகாபுரி என்னும் நகரை ஆளும் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டான், ஒரு நாள் தன்னுடைய புட்பக விமானத்தில் ஏறிவரும் பொழுது காவிரி, பவானி நதிக் கரையில் வளம் கொழித்திருக்கும் சோலைகளையும் அவற்றின் நடுவே தெய்வீக ஒளி பொருந்திய சமஸ்கிருதத்தில் பதரி என்று அழைக்கும் இலந்தை மரத்தையும் கண்டான். அவ்விடத்தில் புலியும் மானும், பசுவும், யானையும் சிங்கமும், எலியும் நாகமும் பகையின்றி ஒருங்கே ஆற்றங்கரையில் நீர் உண்டு விளையாடும் அற்புதத்தையும் பார்த்தான். அந்தத் திருத்தலத்தில் தவம் நிறைந்த முனிவர்களும், யோகிகளும், கின்னரர், கந்தர்வர் முதலானோரும் குழுமியிருந்தனர். இந்த காட்சியைக்கண்ட குபேரன் உள்ளம் நெகிழ்ந்து வணங்கி நின்றான். அப்போது அசரீரி தோன்றி குபேரனே இவ்விடத்தில் வேதமே வடிவாகிய இலந்தை மரம்...