தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம், பவானி நகரில் தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்திருத்தலம் ஐந்து மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடத்திற்கு கூடுதுறை எனவும், முக்கூடல் எனவும் பெயர் பெற்றுள்ளது. மூன்று ஆறுகளும் சங்கமிப்பதால் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவன், சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இத்திருக்கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. திருக்கோயிலின் வடக்கு திசையில் ...